Monday 6 February 2012

வெட்டப்படும் கைகளும் நறுக்கப்படும் கால்களும்


எட்டிப் பிடித்து
குட்டைக்குள்ளிருந்து மேலெழ
மீண்டும் மீண்டும் நீண்டாலும்
மேலிருந்து
வெட்டப்படும் கைகள்
சிதறித் தெளித்து
கண்ணை மறைக்கின்றன...

இரத்தத் துளிகள்
எழுந்து நின்று
பாதை கடக்க
மீண்டும் மீண்டும் வளர்ந்தாலும்
நறுக்கப்படும் கால்கள்
உதிரமும் சதையும் சகதியாகி
உள்ளிழுக்கின்றன...

மடிந்து போன மனங்கள் யாவும்
என்னை தூக்கி விடவே நினைத்தாலும்
சிக்கிக் கொண்ட என் கால்கள்
நகர மறுக்கின்றன
அந்த இரத்தவாடை
பிடித்துப்போன மனமும்தான்...

முரண்பட்டு
முன்னேற முயற்சிக்கையில்
வெட்டப்பட்டு
இரத்தம் தோய்ந்து
வீழ்ந்து கிடக்கும்
என் கைகளே
என்னை எட்டிப் பிடித்து
உள்ளிழுக்கின்றன...

வெட்ட வரும் வாள்களை
பிடித்துக்கொண்டு
இழுத்து அழுத்த வரும் கைகளின்
மீதேறி
வழிந்து ஒழுகும் உதிரத்தை
துடைத்து எறிந்துவிட்டு
மேலெழுந்து நடக்க
மீண்டும் முயல்கிறேன்...
Anuradha Niketh https://www.facebook.com/anuradha.niketh இவரின் ஓவியம் ஒன்றால் தூண்டப்பட்ட எண்ணங்கள் இவை... 

The Painting can be found at https://www.facebook.com/photo.php?fbid=2880735372212&set=a.2880702251384.134547.10748