Thursday 5 April 2012

கண்ணீர்


தனிமை
என்னை கட்டிக் கொள்ள
எட்டிப் பார்க்கிறது..

தனியாய்
கட்டி அணைக்க யாருமற்று
கண்ணீர் துடைக்க கைகளற்று
கண்ணீர் கொண்டு என் சோகங்களை
கழுவிக்கொண்டிருக்கிறேன்...

இந்த கண்ணீர் துளிகள்
சின்னதாய் இருந்தாலும்
பெரிய மனது
என்னையும் சேர்த்து ஆறுதல் படுத்துகிறது...

செய்த தவறுகள் யாவும்
கண்முன்னே
கண்ணாடியில்லாமல்
பேருந்தின் ஜன்னல் காட்சிகளாய்
விரிந்து பரந்து
மாறிக்கொண்டே இருக்கின்றன
அனைத்திலும் நான்
கொடூரமான வில்லனாய்...

ஒவ்வொரு துளியும்
நான் கொடுத்த வலியை
சொல்லி சொல்லி
வலித்து விட்டு போகிறது...

இறந்து போகும் அவசரத்தில்
மனிதன் அழுவதன் ரகசியம்
இன்றுதான் புரிந்தது
அத்தனையும் கண் முன்னே வந்ததால்
கண்ணீரால் கழுவிக்கொள்கிறானோ...

Tuesday 3 April 2012

பிண வாடை


சுற்றும் முற்றும் தேடுகின்றேன்
எங்கேயிருந்து வருகிறது
எனக்குப் பிடித்த அந்த
பிண வாடை...

திக்குத் தெரியாமல் இருட்டில்
பாதை மாறி
வந்து நின்ற இடமோ
சுடுகாட்டு வாயில்
உள்ளே ஒரு பிணம்
தனியாய் எறிந்துகொண்டிருக்கிறது...

எத்தனை நாள் ஆனது
நன்றாக உள்ளிழுத்து
இருத்திக் கொண்டேன்...

தனியே எறிந்துகொண்டிருந்த
அந்த சவம்
எனக்கு துணையாக
இடுக்காட்டு பாதையில்
என்னுடனே வந்து
என்னை இந்த
மனித காட்டுக்குள்
தள்ளிவிட்டு போனது...

இப்போது எனக்கு
பயமாய் இருக்கிறது...