Thursday 13 October 2011

அந்த வெள்ளை காகிதங்களில்


ஏதேதோ எண்ணங்கள்
எங்கெங்கோ பறந்து சென்று
அங்கங்கே ஒட்டிக் கொண்டு
மீண்டும் எடுக்க வராமல்
பிசினி போல...

நிலையற்ற வாழ்வு
நிறைய வலியோடு
முடித்து கொள்ளலாம் என்றால்
கடமைகள் பல
வரிசையில் வந்து
இழுத்து பிடித்து
முடிவுக்கும் வழியில்லாமல்...

காலன் வருவதற்குள்
படித்து முடித்துவிட வேண்டும்
எனற அவசரத்தில்
வேகவேகமாய் புரட்டுகின்றேன்
ன் வாழ்க்கை பக்கங்களை...

நாற்பது வருட கடமைகளை
நாலு நிமிடத்தில் படித்து
நாலு மணி நேரத்தில்
செய்தும் முடித்து
நிம்மதியாய்
படுத்து உறங்க
வழி தேடுகின்றேன்...

என் காலப் பக்கங்களில்
அவசரத்தில் கிறுக்கப்பட்டவை
காலியாக இருக்கின்றன
செய்வதறியாமல்
அந்த வெள்ளை காகிதங்களில்
புதையுண்டு
செயலற்று நிற்கின்றேன்...

சீக்கிரம் என்கிறான் காலன்
முடியாது என்கிறது காலம்
நடுவில் நான்
தேங்கிப்போய்...

1 comment:

Ranioye said...

vellai pakkangkalilum vanna kolam ida vaazhkai vasantham magum ..
kulaththilthan thamarai malarum neer thengki kidappathal than... themaikalilum nanmai undu thedungkal !!

Post a Comment