Tuesday 13 December 2011

என் பெயர் விபச்சாரி


அவன் என்னை
விட்டு விற்று சென்று
இன்றோடு ஒரு வருடம்
வலித்தது
கசந்தது
பழகிப் போனது
நானும் உணர்ச்சியாலான
இரத்தமும் உதிரமும் ஓடும் மிருகம்தான்
இப்போதெல்லாம்
சிலரால் சுகமாகவும் இருக்கிறது...

என் சுவற்றில்
கோடுபோட்டு வைத்த கணக்குப்படி
என் மீது படர்ந்திருக்கும் நீ
425ஆவது வாடிக்கையாளர்
நாள் கணக்கு விகிதாசாரப்படி பார்த்தால்
எனக்கு மதிப்பு
அதிகம்தான் போலும்

அந்த காம்புகளை
மட்டும் காயப்படுத்திவிடாதே
என் மகன்
அதில்தான் பாலுண்ண வேண்டும்...

2 comments:

Ranioye said...

nice!

தாய்மனம் said...

விபச்சாரிகள் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு அழிவு பாதையில் இறங்கி வந்ததில் பெண்களின் பங்கும் இருக்கு # விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பாலான விபச்சாரிகள் ஒரு வகையில் அதை வெறுக்கவில்லை. சாப்பாட்டுக்கு வழி இல்லாத பல பெண்கள் பிச்சை எடுத்தாலும் சோரம் போவது இல்லை. # விபச்சாரிகள் திருத்தப்படவேண்டும் ஆதரிக்க படக்கூடாது

Post a Comment