Tuesday 3 April 2012

பிண வாடை


சுற்றும் முற்றும் தேடுகின்றேன்
எங்கேயிருந்து வருகிறது
எனக்குப் பிடித்த அந்த
பிண வாடை...

திக்குத் தெரியாமல் இருட்டில்
பாதை மாறி
வந்து நின்ற இடமோ
சுடுகாட்டு வாயில்
உள்ளே ஒரு பிணம்
தனியாய் எறிந்துகொண்டிருக்கிறது...

எத்தனை நாள் ஆனது
நன்றாக உள்ளிழுத்து
இருத்திக் கொண்டேன்...

தனியே எறிந்துகொண்டிருந்த
அந்த சவம்
எனக்கு துணையாக
இடுக்காட்டு பாதையில்
என்னுடனே வந்து
என்னை இந்த
மனித காட்டுக்குள்
தள்ளிவிட்டு போனது...

இப்போது எனக்கு
பயமாய் இருக்கிறது...

No comments:

Post a Comment