Saturday 7 May 2011

உன் கண்களில் வழியும் கண்ணீரை

உனக்கு தெரியுமா 
அம்மா
உன் கை பிடித்து நடக்க
இன்றும் ஆசை இருக்கு...

நீ சமைக்கும் போது
உன் கால்களை
கட்டிக் கொள்ளும் சுகம்...

உன் முந்தானை பிடித்து
உன் பின்னாலேயே
வீட்டை வலம் வரும் நினைவுகள்...

ஒவ்வொரு முறை
நீ என்னை முதமிட்டு
உச்சி முகரும் போதும்
என் நாசி தீண்டும் உன் வாசம்...

உன் மார்பில் 
முகம் புதைத்து
இடையை கட்டிப் பிடித்தால் மட்டுமே
தூக்கம் வரும் அந்த இரவுகள்...

இருவரும் 
ஒன்றாய் குளிக்கும்போது
என்னை சில்லிட வைக்கும்
உன் நீண்ட கூந்தலின் ஈரம்...

புரியாத தருண்ங்களில் 
உன் கண்களில் வழியும் கண்ணீரை
தொடைத்து விட்டு முத்தமிட்ட்து....

1 comment:

sowmya said...

/புரியாத தருண்ங்களில்
உன் கண்களில் வழியும்
கண்ணீரை
தொடைத்து விட்டு முத்தமிட்ட்து.../

இந்த மாதிரி தருணங்கள் எல்லாருக்கும் அவங்கவங்க அம்மாகிட்ட ஏற்பட்டிருக்கும். ரசித்து படித்தேன். அருமை.

Post a Comment