Tuesday 5 July 2011

வலிக்கிறது எனக்கு


உயர உயர என் மீது
வாய் பிளந்து
நான் பார்த்திருக்கையில்
என் அடி வயிற்றில்
வேகமாய் இறங்கும்
இந்த இயந்திரங்கள்
வலிக்கிறது எனக்கு...
என் அருமை பிள்ளையே
என்னதான் இன்னமும் தேடுகிறாய்
என்னுள்
என் வயிற்றுக்குள்...
தண்ணீர் கொடுத்தேன்
கணிமங்கள் கொடுத்தேன்
எரிபொருள் கொத்தேன்
எரிவாயுவும் கொடுத்தேன்
இன்னமும் எத்தனை
ஓட்டைகள் போடுவாய்
இன்னமும்
எத்தனை பெரிதாய்     
எத்தனை ஆழமாய்
என்னை கிழிப்பாய்
நீயும் என் பிள்ளைதான்...
நீ வசிக்கத்தான்
இத்தனை பெரிய
கூடு கொடுத்தேன்
என்னை தோண்டித்தான்
வீடு கட்ட வேண்டுமா...
உன் கை கொண்டு கிழுத்தவரை
உன் தீண்டலின்
சுகமாவது மிஞ்சியது
இந்த ராட்சஸ
இயந்திரங்களின்
கீரல்களும் உராய்வுகளும்
வலிக்கின்றன...
எல்லா உயிர்களும்
என் பிள்ளைகள்
அவர்களுடையதும் அவர்களும்
உனக்கே வேண்டும் என்பது
நியாயமா...
அடேய்
என்னுள்ளும் கோபம் இருக்கிறது
இனியும் ஆழம் வேண்டாம்
சாம்பலாகி விடுவாய்
அமைதியாய் ஓடும்
இரத்த குழம்புகள்
வெடித்துவிடுவேன்
எரிமலையாய்...
உன்னை விட
என் எரிமலைகளுக்கு
பாசம் அதிகம்

4 comments:

சரவண வடிவேல்.வே said...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்..

Ranioye said...

vendam amma un sirram tangkathu
porumaiyin porule neethaane
porumatha!!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
பூமியை மிகவும் கொடுமைப் படுத்துகிறோம்.

Unknown said...

வரிகள் அனைத்தும் நெஞ்சில் குத்தியது

Post a Comment