Monday 18 July 2011

இங்கே வீரியம் அதிகம்


பிறப்புறுப்பு விலக்கி
தலைகுப்புற விழ
தின்னம் கொண்ட என்னால்
நெல் உமியின்
கூர் மழுங்கச் செய்ய முடியவில்லை....
சீமை பால்
சுரக்கச் செய்ய
வல்லமை படைத்த எனக்கு
எருக்கம் பாலின்
விஷம் முறிக்கத் தெரியவில்லை...
உறவாகிப் போன
யாருக்காவது கேட்கிறதா
அழுகையாகிப்போன என் உறுமல்...
என் உயிருக்கு காரணமானவனே
உன்னை தப்பாமல்
அமுது மொழியில்
அப்பா என்றழைப்பேன்
உன் சோகம் தீர
என் வெள்ளை சிரிப்பு
உன் தாயிடம்
நீ இழந்த முத்தங்கள்
என்னால் மட்டும்தான் தர முடியும்
என் பிஞ்சுக் கைகளின் அணைப்பில்
அமைதி கொடுப்பேன்
என்னை இந்த கூட்டில்
விட்டுவிடுங்கள்...
நான் பட்டுப் பாவாடை கேட்க மாட்டேன்
சமைஞ்ச நேரத்தில்
சீர் ஏதும் கேட்க மாட்டேன்
கல்யாணம் செய்யும்
அவசியமும் தரமாட்டேன்
காதல் என் மோகத்தை தீர்க்கட்டும்
என் உயிரை
என்னோடு விட்டுவிடுங்கள்...
இங்கே வீரியம் அதிகம்
என்னை கொல்லாதீர்கள்

1 comment:

Post a Comment