Friday 8 July 2011

ஆதியும் அந்தமும்


ஆதியும் அந்தமும் இல்லாமல்
அந்தரத்தில் ஒரு தள்ளாட்டம்...
முதலுக்கும் முடிவுக்கும்
நடுவே ஒரு போராட்டம்.....
காற்றில்லாத வனாந்தரத்தில்
யாருமில்லாத ஆரவாரம்.....
வட்ட வட்டமாய் வளையங்களும்
நீண்டு கொண்டே போகும் பாதைகளும்
எங்கே இட்டுச் செல்கின்றன......
வேலும் வில்லும் காக்கவில்லை
அறையப்பட்ட ஆவி தோன்றவில்லை
ஒருவரேயானாலும் ஏதும் நடக்கவில்லை....
வராத மழைக்காக
கருகிப் போகும் நாற்றாங்கால்கள்

1 comment:

Post a Comment