மரித்துப்
போய்விட்டன
மாந்தோப்பு
தந்த
தரை தொடும்
ஊஞ்சல்
கிளைகள்
கால்
நக்கிக் கொண்டே
உடன்
சுற்றி வரும்
பெயர்
வைக்காத
வளர்ந்த
நாய் குட்டி
நாய்
குட்டிக்கு
துணையாக
எப்போதும் திண்ணையில் இருக்கும்
மூளை
வளர்ச்சி குன்றிய
சித்தப்பாவின்
அழகிய சிரிப்பு
வண்ணத்தை
நிரப்பிய
கனகாம்பரமும்
டிசம்பர் பூக்களும்
வாசத்தை
வீசிய
மல்லிகையும்
சம்பங்கியும்
அதில் அந்த
குண்டு மல்லிகை தனிரகம்
நீர்
இரைக்கும் இன்ஜினில்
தனியாக
வரும் சுடுநீர் குளியல்
எத்தனை
உயரம் வளர்ந்தாலும்
என்
கல்லடிக்கு பயந்து பழம் தந்த
கொடுக்காய்ப்புளி
மரம்
நிலவு
பார்த்த
மொட்டை
மாடி உறக்கங்கள்
எதற்கு என்
புரியாமல்
நடுக்கூட்த்தில்
ரசித்த
பெரிய ஸ்டார்கள்
சின்ன
பாட்டிதான்
என்னை
பிடிக்காதுதான்
இருந்தாலும்
தீபாவளிக்கு
அவர் சுடும்
கருப்பு
அதிரசம்
அனைத்திலும்
இறுதியாய்
மரித்துப்
போனது
என்
பாட்டன்
எனக்கே
எனக்காக மட்டும்
வாங்கி
வரும் 100கிராம் பொட்டலம்
தனியாக
அந்த
மோட்டார்
கொட்டகையும்
அதற்கு
நிழல் தந்துகொண்டு
அந்த புதிய
ஒற்றை
மாமரமும்...
No comments:
Post a Comment