Monday 4 March 2013

அமைதியாகிப் போன கைப்பேசி



காத்திருந்த அழைப்புகள் ஏதும்
இப்போதெல்லாம் வருவதில்லை...
வெட்கப் படவைக்கும்
காதலிகளின் கொஞ்சல் சிணுங்கல்கள்
இனி எப்போதுமேயில்லை...
காசு கேட்டு தொந்தரவு செய்யும்
எரிச்சலூட்டும் கடன்கார்ர்கள்
அழைக்கப்போவதில்லை...
நேரம்காலம் இல்லாமல் அழைக்கும்
மேலாளரின் இம்சைகள்
இல்லவே இல்லை...
இப்படியாய் எப்போதும்
அலறிக்கொண்டிருக்கும் அலைபேசி
இதோ இப்போது
அமைதியாய்
அவனைப்போலவே சலனமற்று
எப்போதாவது வரும்
அழைப்பிற்கு மட்டும்
யாரோ பதில் சொல்கிறார்கள்
அவன் இறந்துவிட்டான்...

No comments:

Post a Comment