Thursday 10 November 2011

எனது கீச்சுகள் - 1

கனவுகள் அங்கே பாய் விரித்து காத்திருக்கின்றன... நான் வந்து இமை மூட வேண்டுமாம்...


என்னை விட்டு யார் போனாலும் நான் கவலை கொள்ளப் போவதில்லை... நீ என்னை விட்டு போன வலி என்னோடு இருப்பதனால்...

உனக்கு எப்படியோ தெரியாது... எனக்கு உன் பெயர்தான் மிகவும் இனிமையான வார்த்தை... உன் பெயர் கொண்டவர்களை என் தோழிகளாக்கி கொள்கின்றேன்...

உயிர்த்தெழும் நேரங்களில் எல்லாம் உன் மூச்சுக் காற்றுதான் எனக்கு சுவாசம் தருகிறது...

நிகழ்காலத்துக்குள் ஓடி வந்துவிடுங்கள்.. எதிர்காலத்துக்குள் நுழைந்த உங்களை கொல்ல அந்த காலன் துரத்தி வருகிறான்...

ஆண்கள் சோகங்களை சொல்வதில்லை பெண்கள் சொல்லாமல் விடுவதில்லை.. 

அடங்கிப் போகக்கூடாது என்றால் அத்துமீறுவது அன்று அர்த்தமோ இன்றைய பெண்களுக்கு... மன்னிக்கவும் வருத்தமாக இருக்கிறது...

கூண்டில் அடைக்கப்பட்டவைகள்தான். இருந்தாலும் அந்த குருவிகளின் கீச்சுகள் இனிமையாகத்தான் இருக்கின்றன. பாடுகின்றனவா, அழுகின்றனவா, திட்டுகின்றனவா     

மழையில் நடக்கத்தான் வெளியே வந்தேன். நீங்கள் வாரி இரைக்கும் சேற்றில் குளிக்க அல்ல... வாகன ஓட்டிகளே கொஞ்சம் மெதுவாக செல்லுங்கள்...

கையில் குடை இருக்கிறது.. இருந்தும் மழையில் நனைந்துகொண்டே நடக்க சொல்கிறது மனது...  

No comments:

Post a Comment