Saturday 12 November 2011

நான் என்ன காம இயந்திரமா


விலை கொடுத்தா
வாங்கி வந்தாய்
புணர்ந்து முடித்து
உதறிப் போகின்றாய்...

வியர்வை முத்துக்கள்
இனிப்பாக்க
தென்றல் வேண்டும்
நீயோ
உன் புழுக்கம் போக்க
எழுந்து போகின்றாய்
எனக்கும் புழுங்குகிறது...

காமமும் மோகமும்
காதல் இல்லாதபோது
வலிக்கிறது...

நான் என்ன இயந்திரமா
உன் தீண்டலுக்கு இயைந்து இயங்கிட
பின்
உன் வேட்கை தணிந்ததும்
நின்று போக...

நடுவிலே ஆரம்பித்து
நடுவிலேயே முடிந்தும் விடுகிறது
என் வேட்கை மட்டும்
கோபமாக தொடர்கிறது...

இதமாய் ஒரு முத்தம்
சுகத்தின் சோர்வில்
உன் மார்பில் தஞ்சம்
தாம்பத்யத்தில்
இதை வேண்டுவதும்
தவறா....

உனக்கும் உன் காமத்திற்கும்
என்னை கேட்காமலேயே
என்னை எடுத்துக்கொள்கிறாய்
நேசமில்லாமல்
மறுக்க முடியாமல்
நான்...

எனக்கான வேட்கையை
நான் யாரிடம் கேட்டு
தணித்துக் கொள்ள
கேட்கும் உரிமைகூட
இழந்து நான்...

4 comments:

Unknown said...

"Kaamamum Mogamum Kaathal illatha pothu Valikkirathu" - Sureer ena uraikkum vaarthaikal..
Azhagu enru mudikka mudiyavillai..
Suzhatrappatta saattaiyin ethir nirkum vargathin pirathinithiyaai iruppathaal yosanaiyudan thalai kavizhkiren..
Uriya Aankal Unara Kadavathu..

Nathan said...

@காதல் ராஜா,

மகிழ்ச்சி உங்களின் அங்கீகாரத்திற்கு...

Nellayappan B said...

“ என்னை கேட்காமலேயே
என்னை எடுத்துக்கொள்கிறாய் ”
வேதனை நிறைந்த வரிகள். புரிதல் இல்லாத தாம்பத்யம் கொடுமையானது !

தாய்மனம் said...

தன்னை புரிந்து கொண்டு, தன்னை புகழ்ந்து, தான் விருப்பும் நேரத்தில், தான் சுகபட விருப்பும் பெண்கள், அதுக்கான தங்கள் பங்கு என்ன, என்பதை பற்றி சிந்தித்து செயல் படுத்தும் பொழுதுதான், தேடியது கிடைக்க பெறுகிறார்கள் # கிளி போன்ற பெண்டாட்டி இருக்கும் பொழுது, ஒரு ஆண், குரங்கு போன்ற வைப்பாட்டி மடியில் கிடக்கிறான் என்று ஏளனம் பேசும் நாட்டில் # கிளி ஏன் இழந்தது என்றோ, எப்படி இழந்ததை மீட்பது என்றோ, வழி காட்டுவது இல்லை. # சும்மா சொல்லவில்லை படுக்கையில் மனைவி தாசியை போல செயல் படவேண்டும் என்று # தலையனை மந்திரம் எந்த வகை !!

Post a Comment