அடி வயிற்றில்
உயிர் போகும்
அந்த ஒற்றை வலி...
ஐயோ மகளே
கரைந்து போனாயோ
பதினைந்து நாள் கனவு
கலைந்து போனாயோ
ஒழுகும் உதிரம் வழியே
உருக்குலைந்து போனாயோ
மசக்கையின் மயக்கமே தெளியவில்லை
மாயமாய் போனாயோ
வயிற்றை தடவுகிறேன்
இல்லாமலேயே போனாயோ...
அத்தனையும் இனிமையாய்
என்னை பார்த்து புன்னகைத்தன
அழகாய் தெரிந்தன...
கனவுகள் பல
உன்னை உள்ளே கொண்டு
பல தூரம் சென்றன
உனக்கான முதல் முத்தம்
நீ தூங்கும் அழகு
பேசும் மழலை மொழி
வளரும் அழகு
அத்தனையும் இன்னமும்...
வேண்டும் என்றுதானே
வரம் கேட்டேன்
நான் வேண்டாம்
என்றோ
என்னை விட்டு போனாய்...
தாய்மை என்ற இனிமையின்
திமிர் இல்லாமல் போனது...
எனது உயிர்
என்னுள் விதைத்த உயிரே
என்னை வெறுத்தாயோ...
செய்வது அறியாமல்
ஏதும் செய்ய தோன்றாமல்
தொப்புள் கொடி உறவு அறுந்து
மல்லாந்து படுத்திருக்கிறேன்
நீ போன பாதை பார்த்து...
மனசதின் வலி
அதிகமாய் இருக்கிறது...
உனக்கான
எனது காத்திருத்தல்
மீண்டும் ஆரம்பம்...
1 comment:
Unarnthirukkiren.. :-(
Post a Comment