Friday 11 November 2011

எனது கீச்சுகள் - 2

எட்டி எட்டி பார்த்துவிட்டு போகும் உன் நினைவுகள் உன்னை என்னிடம் மீண்டும் கூட்டி வந்து விட்டு விட்டு போகிறது...

குடும்பத்தின் சின்ன சின்ன சந்தோஷங்களை துறந்து குடும்பத்திற்காக பணம் பண்ணும் இயந்திரமாக மட்டுமே மாறிப் போன துர்பாக்கியசாலிகள் ஆண்கள்...

எழுதிவிட்டு மீண்டும் படித்து பார்க்கின்றேன்... எத்தனை முறை முயன்றாலும் உன்னைவிட அழகாக ஒரு கவிதையை என்னால் எழுத முடியவில்லை...

நீ என்னுடன் இல்லாத வேளைகளில் மட்டும் உறக்கக் கத்திவிட்டு கல்லறையில் போய் படுத்துக்கொள்ள வரம் வேண்டும்..   

முத்தத்தின் வழியே முழுதாய் என்னை விழுங்கிப் போகின்றாய் என் ராட்சசியே...

ஓவென்று வாய்விட்டு ஒரு அழுகை... பிறகு நல்ல தூக்கம்... துக்கமோ பாரமோ என்னை தாக்கும்போதெல்லாம் எனக்கு கை கொடுக்கும் இருவர்...   

நான் மட்டும் போதும் எனக்கு... நான் என்னை கை பிடித்து முன்னெடுத்து செல்கின்றேன்...

வளைவுகளில் விழுந்து வீழ்த்துகிறேன்...  

போர்வைக்கு வியர்க்கிறது.. 

No comments:

Post a Comment