Thursday 17 November 2011

அத்தனை கோபம்


அத்தனை கோபம் எனக்கு
யார் மேலே
எதன் மேலே
எதனாலே
எதுவும் தெரியவில்லை
ஏதும் புரியவுமில்லை...

நிறையவே இருந்தது
கண்ணையும்
கருத்தையும் உறுத்திய
பல விஷயங்களில்
எனக்கு வலி தந்தவை
என்னை பார்த்து
ஏளனமாய் சிரித்தவை...

அத்தனை கோபமும்
ஒரு சேர
ஒரே அடியில்
இறங்கியது
உடல் சிதைந்து
குலைந்து குழைந்து
அந்த உயிர் உதிரம்
பல தூரம் தெரித்தது
அத்தனை கோபமும்
ஒரு சேர
கையில் கடித்த
அந்த கொசுவின் மீது...

கொசு மடிந்தது
கோபம்...

No comments:

Post a Comment