அத்தனை கோபம் எனக்கு
யார் மேலே
எதன் மேலே
எதனாலே
எதுவும் தெரியவில்லை
ஏதும் புரியவுமில்லை...
நிறையவே இருந்தது
கண்ணையும்
கருத்தையும் உறுத்திய
பல விஷயங்களில்
எனக்கு வலி தந்தவை
என்னை பார்த்து
ஏளனமாய் சிரித்தவை...
அத்தனை கோபமும்
ஒரு சேர
ஒரே அடியில்
இறங்கியது
உடல் சிதைந்து
குலைந்து குழைந்து
அந்த உயிர் உதிரம்
பல தூரம் தெரித்தது
அத்தனை கோபமும்
ஒரு சேர
கையில் கடித்த
அந்த கொசுவின் மீது...
கொசு மடிந்தது
கோபம்...
No comments:
Post a Comment