Saturday 2 April 2011

என்னை நானே உயிர்ப்பித்துக் கொள்கின்றேன்

நான் தனியாய் 
இப்படித்தான் இருந்திருக்கிறேன்
கூட்டத்தில் கை வீசி நடந்தாலும்
தனியாய் 
சுகமாய் இருந்திருக்கிறேன் 
முன்னொரு சமயம் 
நிறைய எழுதி இருக்கிறேன் 
படிப்பதற்கு என் உலகில் 
யாரும் இல்லை 
கற்பனையும் கலையும்
உறங்கச் சென்றன 
இதோ மீண்டும் நான்
என்னை நானே உயிர்ப்பித்துக் கொள்கின்றேன்....
இன்றும் தனியாகவே 
என் கை பிடித்து மகிழ்ந்தவர் 
வேறொருவர் கை பிடித்தவுடன்....
நான் தனியாகவே இருந்திருக்கிறேன்....
ஆனால் மகிழ்ச்சியாக...

என் வாழ்வின் மகிழ்வுகள் 
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் 
இங்கே பதிகின்றேன்...

2 comments:

Rathnavel Natarajan said...

நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

அ.முத்து பிரகாஷ் said...

உயிர்த்தெழும் கலையை எங்களுக்கும் கற்றுத் தாருங்கள் தோழர். வரவேற்கிறேன் பேரன்புடன்!

Post a Comment