Monday 11 April 2011

காயங்களை தடவிக் கொடுப்பது

இந்த மனித மனங்களை 
தொட்டுப் பார்ப்பது
இதமாய் இருக்கிறது 

அவர்களின் காயங்களை 
தடவிக் கொடுப்பது 
எனக்கு 
சுகமாய் இருக்கிறது 

இதை நான் 
இழப்பு என்பதா 
புரியவில்லை 

நான் 
இப்படியே வாழ்ந்துவிட்டு போகிறேன் 
எல்லோருக்குமாய்....
அடுத்தவர் பார்வையில் ஏமாளியாய் 
எல்லோருக்கும் 
ஏதோ ஒரு தருணத்தில் 
சுகமான தென்றலாய் 
இருந்துவிட்டு போகிறேன் 
எல்லாமுமாய் இருப்பதை விட 


1 comment:

Rathnavel Natarajan said...

இந்த மனித மனங்களை
தொட்டுப் பார்ப்பது
இதமாய் இருக்கிறது

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

Post a Comment