Sunday 3 April 2011

என் நம்பிக்கை மரணிக்காது

அத்தனையும் விட்டு போனாலும் 
நீ இருகின்றாய் 
என் தன்னம்பிக்கை 
நீ என்னோடே இருக்கின்றாய் 
பொருள் விட்டு போகலாம் 
மண் விட்டு போகலாம் 
சொந்தம் விட்டு போகலாம்
காதல் விட்டு போகலாம்
உறவு விட்டு போகலாம்
உயிர் கூட 
விட்டு போகப் பார்க்கலாம் 
நம்பிக்கை மட்டும் விட்டு போகாதே...
நான் ஜனித்த காரணம் ஒன்று உண்டு
அது முடியாமல் 
என் இலக்கு எட்டாமல் 
என் நம்பிக்கை மரணிக்காது....
நம்பிக்கை இருக்கும் வரை 
வாழ்க்கை இறக்காது.....

1 comment:

Rathnavel Natarajan said...

தன்னம்பிக்கை தான் முக்கியம். தோல்வி வெற்றியெல்லாம் அதற்கப்புறம் தான்.

Post a Comment