Wednesday 13 April 2011

வார்த்தைகள்

வார்த்தைகள் 
அன்பும் அக்கறையும் நிறைந்த வார்த்தைகள்
கிடைக்க அரியவை 

வார்த்தைகள் 
வலி கொடுக்கும் என்றால்
இனிமையும் கொடுக்கும் 

இவை வெறும் 
வார்த்தைகள் அல்ல - 
சக்தி நிறைந்தவை 

தற்கொலையின் கதவுகளை 
தட்டி வந்தவனை கேட்டுப் பார்
அவனுக்கு தெரியும் 
அன்பான வார்த்தைகள் 
என்ன செய்யும் என்று 

நம்பிப் பார்
அந்த வார்த்தைகள்
செயலாகவும்...
நீ விரும்பும் பொருளாகவும் 
உருமாறும் 
அதிசயம் காண்பாய் ..

வா அன்பே 
உனக்கான என் வார்த்தை 
அன்பும் அக்கறையுடனும் 
நிறைய வலிமையையும் கொண்டது 

வா அன்பே 
அன்போடு 
வேண்டியவர்க்கெல்லாம் 
நிறைய வார்த்தைகள் 
சொல்லி வைப்போம்...

1 comment:

Rathnavel Natarajan said...

வா அன்பே
அன்போடு
வேண்டியவர்க்கெல்லாம்
நிறைய வார்த்தைகள்
சொல்லி வைப்போம்...

அருமை. நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

Post a Comment